Many thanks to http://tamil.sify.com/art/bharathi/ from where we got this article.

மாயை

மாயை பற்றிய பாரதியாரின் விளக்கமும், கருத்தும் முன்பு கூறப்பட்டன. அது பற்றிய பாரதியாருடைய முடிவான கருத்து இன்னதென இன்னும் சற்றே கூறவேண்டியிருக்கிறது. பாரதியாருடைய ஞானத்தேடலில் மிகவும் முக்கியமானது இந்த மாயையின் உண்மை அறிதல், அது சரியாகப் பிடிபடாமல் மாயமானாகவே இவரை இழுத்தடிக்கிறது. சற்குரு ?65;ண்ணனிடம் இவர் உபதேசம் கேட்கப் போனதே ""சகமாயம் உணர்ந்திடத்தான். உலகமே பொய் என்பது மிகவும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு ?49;துவே பொய்யாகிவிட்டது."" இயங்கும் பேருலகத்தில் இயங்கும் எதெது உண்டோ இது அனைத்தும் இறைமையின் உறையுள் அலலது உடை. அல்லது அவனைக் கவிந்திருப்பது அல்லது அவனால் கவியப்பட்டிருக்கிறது என்றெல்லாம் ஈசாவாஸ்ய உபநிஷத்தின் முதற்பாட்டின் முதலடிக்கு வெவ்வேறாகத் தோன்றினும் ஒரே கருத்தில் முடியும் பல பொருள்களை உரைத்திருக்கின்றனர் அறிஞர் பலரும். பாரதியாரே இதை மூன்று விதமாகக் கூறுகிறார்:

1. சூழ்ந்ததெல்லாம் கடவுள்

2. இவ்வுலகத்தில் நிகழ்வது யாதாயினும் அது கடவுள் மயமானது.

3. (அந்த உபநிஷத்தை மொழி பெயர்த்ததில்) இயங்கும் உலகில் இயங்குகின்ற இஃதெல்லாம் ஈசனால் நிரம்பப்படுகிறது.

இப்படி விளக்கும் உலகத்தைப் பொய் என்பதை எப்படி ஏற்கமுடியும் என்பது பெரிய சவால். ஆனால் யோசிக்கும் வேளையில் யோசனை காட்டும் விவேகத்தால் இதைச் சமாளிக்க வேண்டும்.

ஆனால், உலகம் மாலை என்பதும் விளங்குகிறது, இது உள்ளதா அல்லது இல்லதா என்று கேட்டு, உள்ளதும் இல்லை, இல்லதுமில்லை, இன்னதென்று இனங்கண்டு சொல்ல முடியாதது என்று கூறும் வாதத்தைப் பாரதியார் ஒருவாறு சமாளிக்கிறார்.

""மாயை பொய் இல்லை, பொய் தோன்றாது (உண்டாகாது ?86;ுலப்படாது) பின் மாறுகிறதே (அழிவும் மாற்றம் தான்) எனின் மாறுதல் மாயையின் இயற்கை, மாயை பொய் இல்லை. அது கடவுளின் திருமேனி,"" என்கிறார் பாரதியார். உலகம் மாலை எனில் ?9;து கடவுளின் உடம்பு எனில் ?9;தை இயக்கும் உயிர், கடவுள் ?0;னித்தனி உடம்புகள் மாறலாம் ?9;ழியலாம். உலகமே ?9;னைத்துடல்களும் மாறுவதில்லை ?9;ழிவதில்லை. அந்த உலகத்தின் உயிர் என்று கொள்ளத்தக்க பேருயிர்தான் கடவுள் பிரம்மம் என்று செல்கிறது இந்தப் பாதை.

பாரதியார் ""பொய்யோ ?0;ெய்யோ"" என்ற தலைப்பில் தம் சிந்தனைகளைப் பாடியிருக்கிறார். அதில் மேலே சொன்ன சவால் ?0;ிந்திக்கப்பட்டு உடைபடவில்லையோ என்னவோ? இந்தப் பாட்டிற்குத் தனியே ஒரு குறிப்பும் விளக்கமும் தருகிறார். அதில் உலகம் பொய் என்பதை மறுத்துச் சற்றே கோபத்துடனும் உண்மைத் தேட்டத்துடனும் தம் கருத்தைக் கூறுகிறார். அதை வாசகர்கள் படித்துணர்க.

ஒரு பாடலில் மாயையைப் பழித்தும் கூறிகிறார். இந்தப் பாடலில் மாயை புறக்கணிக்கத்தக்கது என்றும், இது திறமை இல்லாதவர்களையே மயக்கி இழுக்கும் என்றும், சித்தத் தெளிவு என்ற நெருப்புக்கெதிரில் இது பொசுங்கிப் போய்விடும் என்றும் கூறிவிட்டுத் தம்மைக் கெடுத்து அழிக்க எண்ணம் கொண்டுள்ள மாயையைத் தாம் கெடுத்து அழித்துவிடுவது உறுதியென்றும் சபதம் கூறுகிறார். மரண பயத்தைக் கடந்தவிட்ட தமக்கு மாயை காட்டும் துன்பங்கள் பெரிதில்லை என்பதைச் ""சாகத் துணிந்தவனுக்குச் சமுத்திரம் எம்மட்டு?"" என்ற பழமொழியுடன் கூறிக்கொள்கிறார். மாயையைப் பார்த்து, ""தேகம் (உடல்) பொய்யென்று உணரும் தீரர்களை உன்னால் என்ன செய்ய முடியும்"" என்று அதட்டுகிறார். ""மாயையே, உனக்கு என்னிடம் இருக்கச் சிறிதும் இடம் கிடையாது? நான் வேறு, உலகம் வேறு நான் வேறு ?65;டவுள் வேறு என்று கருதி ஆத்மாவை இழக்கும் அறியாமை அகன்றுவிட்டது என்னிடமிருந்து. இனி நி எங்கு இருப்பாய்?""என்று வெற்றிச் சிரிப்புடன் கேட்கிறார், ""இருமை அழிதல் ?0;ுவைதம் ?1;ரண்டாவத உண்டு என்று நினைக்கும் இருள் அகலுதல் என்பது அத்வைதக் கொள்கையின் வகையான அம்சம். இதை மிகத் தெளிவாகவும் அழகாகவும் அழுத்தமாகவும் காட்டிப் பாடுகிறார். அனைத்தும் ஒன்றே ?9;னைத்தும் நானே என்பது போன்ற தெளிவுடன் ஒருமை கண்டவர். எதிரே நிற்கக் கூசி மாயை ஓடி விடுமென்றும், மாயை தரும் இன்பத்தை இழிவென்று துணிந்து, தான் அதைப் பெறுவதில்லை என்றும் அதன் முகத்தில் அடித்து, நாயாசிங்கத்துக்கு அரசு தரமுயல்வது?"" என்றெல்லாம் கூறிக் கடைசியில், ""மாயையே, என்னை அடிமைப்படுத்த வேண்டிப் படைகளுடன் வந்து என்னுடன் போர் செய்யவா வருகிறாய்? நான் அஞ்சமாட்டேன். உன்னைத் தூள்துளாக நொறுக்கிவிடுவேன். நான் யார் தெரியுமா? இறைவனே நான், யாருக்கும் நான் அடிமையில்லை. இதை மிக நன்றாகப் புரிந்துகொண்டவன் நான்"" என்று அச்சுறுத்தி மாயையை விரட்டியும் விடுகிறார். எதையும் தவறாகவே காட்டி, உண்மையை மறைத்துச் சதி செய்யும் அறியாமையை மாயை எனக்கொண்டு விரட்டினாரே தவிர, இறைவனுடைய சக்தியாய் ?3;லகே வடிவாய் ?5;ால தேசங்களே தன் திருமேனியாய்க் கொண்ட ஞானமும் செயலும் இவற்றிற்கு ஆதாரமான நல்ல ஆசைகளுமான பரம்பொருளின் இயல்பான அருட்சக்தி மாயையை வழிப்பட்டு தெய்வமாக ?7;ாழ்வளிக்கும் மங்களமாக ஏற்றார் பாரதியார்.

இவ்வாறு பக்தியும் ஞானமும் பக்குவப்பட்டதால்தான பாரதியாரால் ஜீவன் முக்தராக வாழமுடிந்தது என்று சொல்வதில் தவறே இல்லை. அவருக்கிருந்த வறுமையும் வேதனையும் அவர் ஆத்ம சோதனை செய்துகொள்ளவும் ஆத்ம ஞானம் பெறவும் உதவியிருக்கலாம். இதைச் சொல்லும் போது அவர் வறுமையை வெறுத்தும், பொருளின் இன்றியைமையாமையை உணர்ந்தும் கூறியிருக்கும் அத்தனையும் நினைவில் கொள்ளப்படல் வேண்டும். அதற்காக அவர் தம்மை இழக்க விரும்பவில்லை, பிறரிடம் பொருள் யாசிப்பதையும் அவர் மிக்க இழிவாகக் கருதியவர், அதற்காக அவர் பொருளின் தேவையை குறைத்து மதிப்பிடவும் இல்லை. மண்ணுலக வாழ்க்கையில் பணம் என்பதைப் பற்றி அவர் வேடிக்கைப் பேச்சாக வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். மேலும், ""போதும் இவ்வறுமை எல்லாம், எப்போதும் சிறுமைப் புகையில் திக்குமுக்காடும் மணமும், உணர்ந்த ஞானத்தைக்கூட வெறுத்துச் சோர்வடையும் புத்தியுமாக வாழும் வேதனை பொறுக்கவில்லை. எந்தவிதமான உயர்வுமில்லாத கீழ்மக்களின் அவமதிப்பும், கெட்ட செயல்கள் செய்வாருடன் சகவாசம் செய்வதும், கிணற்றுக்ள்ளே மூழ்கிவிட்ட விளக்கைப் போலத் தான் செய்யும் செயல்கள் எல்லாம் பயனற்றுப் போவதும், எங்கெல்லாமமோ அலைந்தும் பயன் அடைய வழியின்றித் தவிப்பதுமாயிருக்கும் இந்தக் கொடிய நோய் அடியோடு அழிதல் வேண்டும்."" உலகத்தில் வறுமை ஒரு கொடுமையன்றோ என்று மனம் புண்ணாகித் திருமகளைச் சரண் புகுகிறார். இந்த வறுமையைக் கூட அவர் தம்மளவில் நொந்துகொண்டு, மருகவில்லை; இந்த உலகத்தில் வறுமைக் கொடுமை அது எந்த மூலையிலிருந்தாலும் தொலைக்கப்பட வேண்டிய மூதேவி. ""மண்ணில் யார்க்கும் துயரின்றிச் செய்வேன் வறுமை என்பதை மண்மிசை மாய்ப்பேன்"" என்பது அவர் கொண்ட சபதம்.

நன்றி: பாரதியார் தேடியதும் கண்டதும்

 

 

Google